தென்தாமரைகுளம்: குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை நிறுவப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் அரசு அனுமதி இல்லாமல் சிலை அமைக்கப்பட்டதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சிலையால் துணியால் மூடினர். இதை பாஜவினர் அகற்ற, அங்கு வந்த போலீசார் மீண்டும் மூடினர். இதையடுத்து சிலையை திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நேற்று முன்தினம் இரவு பாரதமாதா சிலை திறக்கப்பட்டது. நேற்று சிலைக்கு பாலாபிஷேகம் செய்த பாஜவினர் 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.