அம்பை: மன்னராட்சி காலத்தில் முடி சூட்டியவர்களில் கடைசி ஜமீன்தாரான சிங்கம்பட்டி ஜமீன்தார் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி தனது 89வது வயதில் நேற்று முன்தினம் இரவு காலமானார். நேற்று அவரது உடல் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.