×

டிரைவர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 பேர் கைது

திருத்தணி:  திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட குமாரகுப்பம் அருந்ததி காலனியை சேர்ந்தவர் ரகு (40). டிராக்டர் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (எ) விக்கி (20). இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்த நிலையில், ரகு வீட்டின் எதிரே விக்கி மற்றும் நண்பர்கள் தாயம் விளையாடினர். இதை ரகு கண்டித்ததால் ஆத்திரமடைந்த விக்கி மற்றும் அவரது நண்பர்கள் ரகு வீட்டுக்கு சென்று அவரை கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்றனர். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், திருத்தணி அருகே கே.ஜி.கண்டிகை பகுதியில் நடந்துசென்ற விக்கி (23), மணி (எ) மணிகண்டன் (25) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரித்தனர். அதில், அவர்கள் அளித்த வாக்குமூலம், ‘‘கடந்த சில மாதத்துக்கு முன் பைக் ஓட்டியபோது எங்களை கண்டித்ததால் ரகுவுடன் பிரச்னை ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன் தாயம் விளையாடியதை கண்டித்ததால் அவர் மீது எங்களுக்கு கோபம் அதிகரித்தது. இதனால் ரகுவை குத்திக் கொலை செய்தோம்’’ என்றனர். இதனையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Tags : murder , Driver killed, boy, arrested
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...