ஆலந்தூர்: ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் ஏற்றுமதி நிறுவனம் நடத்திவரும் வெங்கடேசன் என்பவருக்கு, தனியார் வங்கியில் ₹20 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி, ₹6 லட்சத்தை பெற்று மோசடி செய்த நாவலூரை சேர்ந்த தாமோதரன் (45) என்பவர், அவருக்கு உடந்தையாக இருந்த மாங்காடு பாலமுருகன், கோவளம் ஆத்மநாதன், அம்பத்தூர் வாசுதேவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஆளும்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறி தாமோதரன் பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.