×

சென்னையில் விமான பயணிகளை ஏற்றிச்செல்ல டாக்சிகளுக்கு அனுமதி

சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பதால் பொது போக்குவரத்தான பேருந்து, டாக்சி, ஆட்டோ உள்ளிட்டவைகள் இயக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 23ம் தேதி முதல் சென்னை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில், சென்னையில் நேற்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட சென்னை மாவட்டத்திற்குள் உள்ள விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து வரும் பயணிகளை கால் டாக்சி, ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மூலம் அழைத்து செல்லலாம் என்று தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளார்.

Tags : Chennai ,airport passengers , Chennai, Air Travelers, Taxis, Corona, Curfew
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...