×

சூளைமேடு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு!!

சென்னை : சென்னை சூளைமேடு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தம்பதியினரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஜீவன்(80) - தீபா (70) தம்பதிக்கு கொரோனா இருப்பதாக 2 தினங்களுக்கு முன்பு குடியிருப்பு வாசிகள் சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.கொரோனா டெஸ்ட் எடுக்க மருத்துவமனை செல்ல சுகாதாரத்துறையினரிடம் தம்பதியினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலில், போலீசார் கதவை உடைத்து வீட்டுக்குள்ளே சென்ற போது, அழுகிய நிலையில் இருவரது உடல் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சோதனைக்காக உடல்கள் கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.



Tags : apartment ,Chilamedu , Furnace, apartment, residence, couple, body, invention
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...