×

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் :திருச்சி டிஐஜி அறிவுரை

திருச்சி : குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்று திருச்சி டிஐஜி அறிவுரை வழங்கியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வக்கிர உணர்வுகளைத் தூண்டும் வீடியோக்களைப் பார்த்ததால் சிறுமி கொலை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணசமுத்திரத்தில் தலையில் காயத்துடன் மீட்கப்பட்ட 9 வயது சிறுமி இன்று காலை திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனிடம் டிஐஜி பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.

Tags : Parents ,children , Children, Cell Phone, Parents, Watch, Trichy DIG, Advice
× RELATED மின்வாரிய ஓய்வு பெற்றோர் போராட்டம்