×

கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதித்தது தொடர்பான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!!

சென்னை : சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதித்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. மாநிலம் முழுவதும் 17 தொழிற்பேட்டைகளை திறக்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட  பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்தது. அதில், ” தினமும் தொழிலாளர்களுக்கு தெர்மல் ஸ்கேன்னர் மூலமாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tags : government ,Ambattur ,Tamil Nadu ,units ,Kindi ,plants , Kindi, Ambattur, Works, Workers
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...