×

தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று!!!

தருமபுரி : தருமபுரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று திரும்பிய பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத பச்சை மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 நாட்களுக்கு பிறகு இன்று ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



Tags : Dharmapuri , Dharmapuri, corona, infection
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...