×

திருவண்ணாலையில் மேலும் 39 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 225ஆக உயர்வு

திருவண்ணாலை : திருவண்ணாலையில் மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 39 பேரில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் 30 பேர்கள், சென்னையில் இருந்து வந்த 5 பேர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், விழுப்புரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 225ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலையில் 81 பேர் குணமடைந்துள்ள நிலையில் 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Tiruvannamalai ,victims ,adults , Thiruvannamalai, 39 people, corona, victims, count, rise
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...