×

பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தகவல்

சென்னை : 10.11ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தகவல் அளித்துள்ளார். பள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு முகக்கவசங்கள் தயார் என்றும் கூறிய அவர், 60,000 முகக்கவசங்கள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் பேருந்து வசதி செய்து தரப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார். 


Tags : Camps ,Schools ,social welfare centers , Schools, Camps, Social Welfare Centers, Transition, School Education, Director, Kannapan
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...