×

சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

சென்னை : சிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். மாமல்லபுரம் சுற்று வட்டாரங்களில் 2 ஆயிரம் கலைஞர்கள் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கொரோனா பரவல் காரணமாக சிற்பத் தொழிலாளர்கள் வேலை இழந்து வருமானமின்றி தவித்து வருவதாகவும் கூறிய திருமாவளவன், சிற்பக் கலைஞர்களையும் அமைப்பு சாரா தொழிலாளர்களாக கருதி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 


Tags : Thirumavalavan ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,government , Sculpture, Workers, Relief, Tamil Nadu Government, Thirumavalavan, Demand
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...