சென்னை : மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை நடத்த உள்ளார். மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.