சென்னை: நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்புடன் வருவோருக்கு தனிப்பாதையை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். நோய்த்தொற்று அல்லாதவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.