×

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு நோய் தொற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 16,277 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் நேற்று 765 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் 587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் 111 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று மட்டும் 12,275 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டத்தில் அதிகபட்சமாக சென்னையில் 587 பேருக்கும், செங்கல்பட்டு 46, காஞ்சிபுரம் 21, அரியலூர், புதுக்கோட்டை, தேனி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 1 நபருக்கும், கன்னியாகுமரி, ராணிப்பேட்டையில் தலா 2 பேருக்கும், மதுரை 6, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேருக்கும், திருவள்ளூர் 34 பேருக்கு என 718 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நேற்று தமிழகத்தில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 833 பேர் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகம் முழுதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 76 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 40 பேருக்கு முதலில் கொரோனா தொற்று இல்லை. வீட்டிற்கு அனுப்பும் போது மீண்டும் நடந்த சோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரயிலில் வந்த 137 பேரில் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 765 பேரில் 464 ஆண்கள், 301 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை 10,340 ஆண்கள், 5,932 பெண்கள், 5 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயது வாரியாக பாதிக்கப்பட்டவர்கள்
தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதிற்குள் 542 ஆண்கள், 461 பெண்கள் என 1,003 பேரும், 13-60 வயதிற்குள் 8,958 ஆண்கள், 4,953 பெண்கள், 5 திருநங்கைகள் என 13,916 பேரும், 60 வயதுக்கு மேல் 840 ஆண்கள், 518 பெண்கள் என 1,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Corona Patients, Curfew
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...