×

பாகனை மிதித்து கொன்றது திருப்பரங்குன்றம் கோயில் யானை

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் யானை தெய்வானை. 14 வயதான இந்த யானையை ராஜேஷ் மற்றும் காளிதாஸ் (35) என இரு பாகன்கள் பராமரித்து வந்தனர். நேற்று மாலை இரு பாகன்களும் கோயிலின் உள்புறம் உள்ள கூடத்தில் யானையை குளிக்க வைத்துக் கொண்டிருந்தனர் அப்போது திடீரென பாகன் காளிதாசை இரும்பு வாளியை கொண்டு யானை தாக்கியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக யானை தனது காலால் பாகனை மிதித்து உதைத்தது.

பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : death ,Thiruparankundram ,Elephant ,Thiruparankundram Temple , Pagan, Thiruparankundram Temple, Elephant
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...