×

ஏழை, எளிய மக்களுக்கு ரமலான் உதவி பொருள் வழங்க வேண்டும்: கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:  புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்களுக்கு தேமுதிக சார்பில் நாளை (இன்று) பெருநாள் உதவிப் பொருட்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நாளையும், ரமலான் தினமான திங்களன்றும், இஸ்லாமிய மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நோன்பு கஞ்சி, காய்கறி, அரிசி, உள்ளிட்ட உணவு பொருட்கள், பண உதவி மற்றும் துணிகள் அந்தந்த மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் வழங்க வேண்டும்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை (இன்று) மாலை 5 மணிக்கு பொருளாளர் பிரேமலதா தலைமையில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் ரமலான் உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : party executives ,Vijayakanth , Poor, simple people, Ramadan help material, party executives, Vijayakanth
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...