சென்னை: மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக மின் வாரியம், கேங்மேன் என்ற புதிய பதவியை உருவாக்கி 5 ஆயிரம் ஊழியர்களை தேர்வு செய்வதாக அறிவித்தது. இதையடுத்து கேங்மேன் பணிக்கு 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது. அதில், தேர்வானவர்களுக்கு கடந்த மார்ச்சில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது 15 ஆயிரம் பேர் தேர்வை எழுதினர். இந்நிலையில் இத்தேர்வுக்கான முடிவுகளை மின் வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. எனவே, இந்த இணையதளத்தில் தேர்வர்கள், தங்களது பதிவெண்ணை பதிவு செய்து தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறினார்.