அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. சென்னை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 9,364க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,773 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 5,523 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 67 பேர் பலியாகி உள்ளனர். சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அம்பத்தூர் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு ஆரம்பத்தில் குறைவாக இருந்தது. தற்போது, இங்கு நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், பாடி, ஜெ.ஜெ.நகர், பாடிகுப்பம், அண்ணாநகர் மேற்கு விரிவு ஆகிய பகுதிகளில் போலீஸ் உதவி ஆய்வாளர், காவலர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.