ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கட்டிடத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தைலாம்பாளையத்தில் துரைசாமி என்பவரின் வீட்டில் நகை, ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. துரைசாமி வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.