×

சென்னையில் 10,000 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு : 4 மண்டலங்களில் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 7,128 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9,364 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,768 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கத்தில் 1,300 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,079 பேருக்கும், அண்ணாநகரில் 783 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் 881 பேரும், தேனாம்பேட்டையில் 1000 பேரும், திருவொற்றியூரில் 250 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 650 பேருக்கும், பெருங்குடியில் 137 பேருக்கும், அடையாறில் 513 பேருக்கும், அம்பத்தூரில் 402 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 100 பேருக்கும், மாதவரத்தில் 192 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 148 பேருக்கும், மணலியில் 115 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 


Tags : Chennai ,zones , Chennai, Thiruvananthapuram Nagar, Corona, Infection, Confirmation, Madras Corporation
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...