×

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஆட்டோக்கள் ஓட இன்று முதல் அனுமதி: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று முதல் ஆட்டோக்கள் ஓட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு  நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, சில  பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. தற்போது, சென்னை மாநகராட்சி காவல் எல்லையை தவிர  தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்க்ஷா ஆகிய வாகனங்கள் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23ம் தேதி  (இன்று) முதல் தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள்  ரிக்க்ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அந்த பகுதிகளில் வாழும் ஆட்டோ,  ரிக்க்ஷா  ஓட்டுநர்களுக்கும் இந்த வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை. பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிடைசர்களை ஓட்டுநர்கள்  வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர்களும், பயணியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள்   ரிக்க்ஷாஆகியவற்றை தினமும் 3 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவியும்,  வாகனத்தில் சுகாதாரத்தையும் பேண வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும்  நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : districts ,Chennai ,Tamil Nadu , Chennai, Districts, Autos, Tamil Nadu Government
× RELATED தமிழ்நாட்டில் நேற்று 16 மாவட்டங்களில்...