×

கொரோனா நிவாரண பணிக்கு லலிதா ஜூவல்லரி 3 கோடி நிதியுதவி

சென்னை: லலிதா ஜூவல்லரியின் சேர்மன் டாக்டர் எம்.கிரண்குமார் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலங்கானா அரசுகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா 1 கோடியை வழங்கியுள்ளார். அதன்படி, தமிழக அரசுக்கு 1 கோடிக்கான காசோலையை தலைமை செயலர் சண்முகத்திடம் வழங்கினார். இதுபற்றி கிரண்குமார் கூறுகையில், ‘‘கொரோனா தடுப்பு பணிகளுக்கு என்னால் இயன்ற உதவியை செய்துள்ளேன். ஊரடங்கு முடிந்து லலிதா ஜூவல்லரி திறக்கப்படும்ேபாது, வாடிக்கையாளர்களின் நலன்கருதி ஷோரூமிற்கு  நுழையும்போது கைகளை தூய்மைப்படுத்த கிருமிநாசினி மற்றும் முகக்கவசம் வழங்கப்படும்.

எங்கள் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வார்கள். ஷோரூம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்யப்படும். தன்னால் இயன்ற உதவியை தொடர்ந்து செய்வேன். அரசின் கொரோனா பாதுகாப்பு பணிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

Tags : LOLITA JEWELERY , Sponsored by Corolla, Lalitha Jewelery, 3 crores
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...