×

கொரோனா பாதிப்பு : 675 ஆக அதிகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 636 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் பூந்தமல்லி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருநின்றவூர் பேரூராட்சி, வில்லிவாக்கம், ஈக்காடு, கடம்பத்தூர், சோழவரம், புழல், பூந்தமல்லி ஆகிய ஒன்றியங்களில் மொத்தம் 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து 39 பேரும் சிகிச்சைக்காக திருவள்ளூர், பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதோடு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 675 ஆக உயர்ந்துள்ளது. தொற்று எண்ணிக்கை சில நாட்களாக குறைந்து வருவதால், மாநில அளவில் இரண்டாம் இடத்தில் இருந்து மூன்றாவது இடத்தில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், இதுவரை 8 பேர் இறந்துள்ளனர். மேலும், 243 பேர் சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மற்ற 424 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.



Tags : Tiruvallur ,Corona , Tiruvallur, Corona, Curfew
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...