×

சென்னை விமான நிலையத்தில் இருந்து பறக்க தயாராகிறது விமானங்கள்: தூய்மைப்படுத்தும் பணி சுறுசுறுப்பு

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் பறக்க தயாராக உள்ளன. விமான நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.   சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு நாளுக்கு 392 உள்நாட்டு விமான சேவைகளும் (புறப்பாடு 196, வருகை 196) சர்வதேச முனையத்தில் இருந்து புறப்பாடு 57, வருகை 57 என 114 விமானங்களும் புறப்படுகின்றன. மொத்தம் சுமார் 506 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. ஊரடங்கால் அனைத்து சேவைகளும் முடங்கிவிட்டதால் இரண்டு மாதமாக சென்னை விமான நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது.

 வரும் 25ம் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் மிகக்குறைந்த அளவில் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையம் சுறுசுறுப்படைந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு விமான நிலையத்தை சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. அந்த பகுதியில் கிருமிநாசினி, கொசுமருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. விமானங்களை பராமரிக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. ஆனாலும் விமான நிறுவனங்களின் டிக்கெட் கவுன்டர்களில் இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கவில்லை. இணையதளங்கள் மூலமாக மட்டுமே டிக்கெட்கள் முன்பதிவு செய்வதாக கூறப்படுகிறது.



Tags : Chennai ,airport Flights ,Germany ,airport , Chennai Airport, Flights, Corona, Curfew
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...