நாமக்கல்: மத்திய அரசின் புதிய மின்சார திருத்தச் சட்டத்தில் இலவச மின்சாரம் ரத்து உள்ளிட்ட சரத்துகளை தமிழக அரசு ஏற்காது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உதய் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகே அரசு அதனை ஏற்றது. நாமக்கல் மாவட்டத்தில் முறைகேடாக உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் எனவும் கூறினார்.