புதுச்சேரி: 10, +1 மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளே தேர்வு மையங்களாக செயல்படும் என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு தேர்வு அறையிலும் 10 மாணவர்கள் அமர வைக்கப்படுவர். தேர்வுக்கு முன் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து சேர்வதை தலைமை ஆசிரியர் உறுதிபடுத்த வேண்டும். தேர்வு பணியில் ஈடுபடும் அதிகாரிகள், தேர்வெழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.