×

ஆந்திராவில் புதையலுக்காக வாய் பேச முடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயற்சித்த உறவினர்கள்!!

ஹைதரபாத் : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் புதையல் எடுப்பதற்காக பெண்ணை நரபலி கொடுக்க முயன்றுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடிகண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த சரஜம்மா என்பவரை நரபலி கொடுக்க முயன்ற பெண் ஆவார். வாய் பேச முடியாதவரை, அவரது உறவினர்களான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் ஏரியின் அருகே அழைத்துச் சென்று இந்த கொடூர செயலில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். சேஷாத்ரி கையில் கத்தி இருப்பதை பார்த்த சராஜம்மா அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

தன்னை நரபலி கொடுக்க இருப்பதாக அருகில் இருந்த கிராமத்தினருக்கு சைகை மூலம் அவர் தெரிவித்து உள்ளார். இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்த கிராம மக்கள், அங்கு பூஜை செய்யப்பட இருந்த இடத்தை பார்த்து அதிர்ந்தனர். சராஜம்மாவின் மகன் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர். புரம் போலீசார்  தலைமறைவாகி உள்ள அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.

Tags : Relatives ,Andhra Pradesh , Andhra, treasure, speechless, female, nervous, relatives
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி