புதுச்சேரி: தமிழக டாஸ்மாக் விலையில் மதுபானங்களை விற்கவேண்டும் என்று ஆளுநர் கூறியதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மதுக்கடைகளை திறக்க ஆளுநர் ஒப்புதல் தராததால் பிரச்சனை இன்னும் சரியாகாமல் உள்ளது. புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க மிக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.