×

மதுரை கோட்டத்தில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்கள் விரைவில் செயல்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: மதுரை கோட்டத்தில் உள்ள ரயில்வே முன்பதிவு மையங்கள் விரைவில் செயல்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி பின்வரும் ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம் , ராமநாதபுரம், காரைக்குடி , புதுக்கோட்டை , சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி,திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், செங்கோட்டை, திருச்செந்தூர் , பழனி, புனலூர், போடிநாயக்கனூர், கோவில்பட்டி, சாத்தூர்,மானாமதுரை , பரமக்குடி ,திருமங்கலம் ,திருப்பரங்குன்றம் ஆகியவை செயல்படும் என்றும், கொரோனா பரவலை தடுக்க அனைத்து முன்பதிவு மையங்களிலும் சானிடைசர்கள் வைக்க வேண்டும் என்றும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Railway reservation centers ,Madurai ,Madurai Railway Reservation Centers , Madurai, Railway Reservation Center, Southern Railway
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...