×

தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். வேலூர் நில அபகரிப்பு தடுப்புப் பரிவு டிஎஸ்பி சுரேஷ், திருவண்ணாமலை செய்யாறு சரக டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். வடசென்னை போக்குவரத்து உதவி ஆணையராக இருந்த பிரகாஷ் பாபு பொருளாதார குற்றப்பரிவு டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டார். செய்யாறு சரக டிஎஸ்பியாக இருந்த பி.சுந்தரம் வடசென்னை போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.



Tags : Tamil Nadu ,transfer ,DGP Tripathi , DGP Tripathi ,orders , three police DSPs,Tamil Nadu
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...