37 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் நடித்து, இயக்கி இருந்தார், ஊர்வசி, கோவை சரளா, தீபா நடித்திருந்தார்கள். தற்போது இந்தப் படம் ரீமேக் ஆகிறது. காலத்திற்கேற்ப சில மாறுதல்கள் செய்து கே.பாக்யராஜ்,கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். கே.பாக்யராஜ் நடித்த கேரக்டரில் சசிகுமார் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ஜே.எஸ்.பி.சதீஷ்குமார் தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்புகள் நடக்கிறது.