கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக கடந்த 2 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக திரையுலகம் கடும் பொருளாதார சிக்கலை சந்திக்க இருக்கிறது. இதன் காரணமாக முன்னணி நடிகர்கள் சம்பள குறைப்பு பற்றி அறிவித்து வருகிறார்கள். முதன் முதலாக நடிகைகளில் டாப்ஸி சம்பள குறைப்பு பற்றி அறிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் படப்பிடிப்புகள் நடக்கும்போது. அதை முன் தயாரிப்புடன் எதிர்கொள்வேன். முன்புபோல எதுவும் இருக்காது என்று தெரியும். அதோடு எந்த விதமான சூழலுக்கும் நான் தயார். சம்பளத்தை குறைக்க வேண்டும் என்கிற சூழ்நிலை வந்தால் அதை செய்ய எனக்கு தயக்கம் இருக்காது. சம்பளத்தை நான் குறைக்கிறேன். சினிமா முக்கியம். அதற்கு பிறகுதானே மற்ற எல்லாம் என்கிறார்.