×

டாஸ்மாக் டோக்கன் விற்ற வாலிபர் கைது

வாலாஜாபாத்: டாஸ்மாக் கடை டோக்கனை பிளாக்கில் விற்ற வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். வாலாஜாபாத் அடுத்த ஊத்துக்காடு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மதுபானங்கள் வாங்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். டாஸ்மாக் கடையில் மதுபானங்கள் வாங்குவோருக்கு வழங்கும் டோக்கன்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாலாஜாபாத் அதன் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் சிலர் டாஸ்மாக் கடைகளில் வழங்கும் டோக்கன்கள், விற்பனை செய்வதாக வாலாஜாபாத் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் தலைமையில் போலீசார் நேற்று, ஊத்துக்காடு டாஸ்மார்க் கடை அருகில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு வாலிபர், டாஸ்மாக் மதுபானம் வாங்குவதற்கான டோக்கனை விற்பனை செய்தது தெரிந்தது. அவரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வாலாஜாபாத் வெள்ளேரியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மதன்குமார் (23) என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், இதுபோல், டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படும் டோக்கன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


Tags : Arrest , Tasmaq, token, youth arrested
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!