சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கக் கோரி அரசாணை (நிலை) எண்.39, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 21.04.2020-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளரை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிற்கு கோரிக்கையை எழுத்துப் பூர்வமாக தபால் / மின்னஞ்சல் (dir-combc@tn.gov.in) மூலமாக அளிக்கலாம்.