×

நாளை முதல் குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே முன்பதிவு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

டெல்லி: சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்ய ஏதுவாக, தற்போது இயக்கப்படும் மற்றும் ஜூன் 1 ம் தேதி முதல் இயக்கப்படவிருக்கும் ரயில்களுக்கான முன்பதிவு நாளை (22-05-2020) காலை 8 மணிமுதல் குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே நடைபெறும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு, மங்களூர் மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டும் குறைந்தபட்சம் 2 கவுண்டர்கள் கொண்டு செயல்படும் என்று அறிவித்துள்ளது.

இந்த மையங்களில் முன்புபதிவு மட்டுமே செய்யமுடியும் என்றும் மறு அறிவிப்பு வரும்வரை  ரத்துசெய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தை தற்சமயம் திரும்பப்பெற இயலாது என்றும் கூறியுள்ளது. முன்பதிவு செய்ய கவுண்டர்களுக்கு வருபவர்கள் முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று ரயில் தெரிவித்துள்ளது.

Tags : announcement ,Southern Railway , Special Trains, Corona, Curfew, Reservation, Southern Railway
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...