சென்னை: விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அரசு அதிகாரிகளுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் செலவுகளைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள் அலுவலக பணி மேற்கொள்வதிலிருந்து மே 31 வரை விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.