டெல்லி: உள்ளூர் விமானப் பயணத்துக்கு புதிய நெறிமுறைகளை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கிடையாது. இருமல், காய்ச்சல் போன்ற நோய் அறிகுறி உள்ளவர்கள் அமர விமானத்தில் தனி இடத்தில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்துவிட வேண்டும்.