கொல்கத்தா: அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார். கரையை கடந்த அம்பன் புயலால் மேற்கு வங்க மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அம்பன் புயலால் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.