மயிலாடுதுறை: கூகுள் மேப் தவறான தகவலை காட்டியதால் மனைவி தன மீது சந்தேகப்பட்டதாக போலீசில் கணவர் புகார் அளித்துள்ளார். செல்லாத இடத்துக்கு சென்றதாக கூகுள் மேப் காட்டியதாக சந்திரசேகரன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். குடும்ப வன்முறை, சித்ரவதைக்கு ஆளாவதால் கூகுள் மேப் நிறுவனத்திடம் நஷ்டஈடு பெற்றுத்தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்.