×

சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது : நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு

காத்மாண்டு :  சீனா, இத்தாலியை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் லிபுலேக், காலாபாணி, லிம்பியதுரா உள்ளிட்ட பகுதிகளை தனது நாட்டு எல்லையுடன் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் நேபாள பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் கேபி சர்மா ஒலி உரை நிகழ்த்தியுள்ளார், அதில் “நேபாளத்தில் இதற்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா் யாருமில்லை. வெளியூா்களில் இருந்து வந்தவா்களால்தான் இங்கு கொரோனா பரவியுள்ளது.நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

தேசிய  ஊரடங்கு  கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலா் நேபாளத்துக்குள் ஊடுருவியதால், குறிப்பாக இந்தியாவில் இருந்து பலா் ஊடுருவியதால்தான், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதுமட்டுமன்றி, இந்தியாவில் இருந்து வருபவா்களை உரிய பரிசோதனைகளின்றி அழைத்து வருவதில் சில அரசியல் பிரமுகா்களும் உள்ளூா் பிரதிநிதிகளும் உடந்தையாக இருக்கிறாா்கள். சீனா, இத்தாலி வைரஸை விட இந்திய வைரஸ் மிகவும் ஆபத்தானது” என்றார்.


Tags : Indian ,China ,Italy ,Nepal , China, Italy, Indian virus, dangerous, Nepal, PM, controversy, talk
× RELATED மலையாள சினிமா முன்னோக்கி செல்ல என்ன காரணம்? கமல்ஹாசன் விளக்கம்