சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கினுள் மட்டும் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.