சீர்காழி: சீர்காழி அருகே குளம் ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சீர்காழி அருகே கூத்தியம்பேட்டை கிராமத்தில் ஊர் குளத்தை குத்தகை எடுப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சரவணன் மாற்று இளங்கோவன் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அடிதடியில் பலத்த காயமடிந்த சரவணன்(50) மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.