×

ஆவடி மாநகராட்சியில் 4 பேர் பலி

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் கொரோனாவால் இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.    திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி பகுதியில் 145 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 40க்கு மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும், 101பேர் சென்னை, திருவள்ளூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்,  இந்த தொற்றால் கடந்த சில் தினங்களுக்கு முன்பு திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரை சேர்ந்த 63வயது மதிக்கத்தக்க அதிமுக பிரமுகர், ஆவடி, கவுரிபேட்டை, பழைய கள்ளுக்கடை தெருவைச் சார்ந்த 40வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர், திருமுல்லைவாயல், டாக்டர் அம்பேத்கர் நகரைச் சார்ந்த 45வயது மதிக்கத்தக்க பெண்மணி. ஆவடி, காமராஜர் நகர், 10வது தெருவை சேர்ந்த 64வயது முதியவர் ஆகியோர் இறந்தனர்.


Tags : Awadhi Corporation , Awadhi Corporation, 4 killed, Corona
× RELATED ஆவடி மாநகராட்சி பகுதியில்...