×

சப்பாத்தியை சூடாக தராததால் மாமியாரை கொன்ற மருமகன்

கந்த்வா: சூடாக சப்பாத்தி சுட்டுத்தர மறுத்த மாமியாரை தடியாலேயே அடித்து கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் பிலோ கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் தன்னுடைய மாமனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு சுரேஷ் வேலையை முடித்துக் கொண்டு, நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவரது மாமியார் குஜார் பாய் (55), சுட்டு வைத்த சப்பாத்திகளை தட்டி கொண்டு வந்து வைத்துள்ளார்.

அதைப்பார்த்து ஆத்திரமடைந்த சுரேஷ், தனக்கு சூடாக சப்பாத்தியை சுட்டுத்தருமாறு கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே அவருக்காக சுட்டு வைத்துவிட்டதாகவும், புதிதாக சுட்டால் ஏற்கனவே சுட்டது வீணாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், தனக்கு புதிதாகத்தான் சுட்டுத்தர வேண்டும் என்று மாமியாரிடம் சுரேஷ் கத்தியுள்ளார். அதற்கு அவரது குஜார் பாய் மறுத்துவிட்டார். இதில் கடும் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அங்கிருந்த தடியை எடுத்து மாமியாரை தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மண்டை பிளந்து இறந்தார்.  சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

Tags : Son-in-law ,Sabbath ,mother-in-law , Sabathi, mother-in-law, murderer, nephew
× RELATED சப்பாத்திக்காக மாணவி தற்கொலை