சென்னை: தமிழக மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நானும் திமுகவும் என்றும் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவோம் என்பதை மற்றோர் கணம் ‘‘ஒன்றிணைவோம் வா’’ முயற்சியின் ஓர் அங்கமான ஏழை எளியோர்க்கு உணவு செயல்பாட்டின் வாயிலாக தமிழக மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளோம். தமிழகத்தின் பசியாற்றிய திமுக. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.