பெங்களூரு: பெங்களூரு நகரில் இன்று பிற்பகலில் பயங்கரமான சப்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது. பெங்களூருவில் ஒயிட் ஃபீல்டு என்ற இடத்தில் வெடி வெடித்தது போல் பயங்கர சப்தம் கேட்டது. பயங்கரமான சப்தம் எங்கிருந்து வந்தது என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒயிட் ஃபீல்டில் விமானப்படை ஒத்திகை நிகழ்ச்சியில் சப்தம் ஏற்ப்பட்டதாக டிவிட்டரில் பலர் தகவல் பதிவிட்டனர். டிவிட்டரில் வெளியான தகவல் குறித்து விமானப்படை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.