மதுரை: சிறைகளில் கொரோனா பரவலைத் தடுக்க 15 ஆயிரம் கைதிகளுக்கு முக்கவசம் வழங்கியுள்ளது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரோல் நீட்டிப்பு, வயதான கைதிகளைத் தனிமைப்படுத்துவது என முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.