டெல்லி: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்பதால் வழங்கியுள்ளது.