ஆந்திரா: ஆந்திராவில் இன்ட்ராஸ்டேட் பஸ் சேவைகள் நாளை முதல் மீண்டும் தொடங்கும் என ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மடிரெடி பிரதாப் தெரிவித்தார். மேலும் ஆரம்பத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே 434 ரூட்களில் 1683 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.